40,032 பி.சி.ஆர் கருவிகளை தமிழக அரசுக்கு இலவசமாக அளித்த டாடா நிறுவனம்.!

தமிழத்தில் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரணா நடவடிக்கைகளுக்காக மத்திய மாநில அரசு பொதுமக்களிடம் நிதியுதவி கோரியது.
இதனை தொடர்ந்து, டாடா நிறுவனம் ஏற்கனவே 1500 கோடி நிதியுதவியை பிரதமரின் நிவாரண திட்டத்திற்கு அளித்திருந்தார்.
தற்போது டாடா நிறுவனம், தமிழக அரசுக்கு 40,032 பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை அனுப்பியுள்ளது. இதன் மதிப்பு 8 கோடி ரூபாய் ஆகும். பி.சி.ஆர் கருவியானது கொரோனா பரிசோதனை  செய்யும் கருவியாகும். தமிழகத்திற்கு உதவிய டாடா நிறுவனத்திற்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துளளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.