நாளை முதல் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…!

  • தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு.
  • வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட டாஸ்மாக் மேலாண் நிர்வாகம்.

தமிழகத்தில் ஜூன் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் 27 மாவட்டங்களில், காலை 10 மணி  முதல் 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது டாஸ்மாக் மேலாண் நிர்வாகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • மொத்தமாக மதுபானங்களை யாருக்கும் விற்க கூடாது. சில்லறையாக தான் விற்க வேண்டும்.
  • டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
  • மதுபானம் வாங்க வருவோர் 6 அடி இடைவெளிவிட்டு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
  • ஒரு அடி சுற்றளவு கொண்ட வட்டத்தினை தடுப்பு வேலிக்குள் வரைய வேண்டும்.
  • கடைகளை திறக்கும் போதும், மூடும் போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • பணியாளர்கள் கட்டாயம் மூன்றடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்.
  • 2 பணியாளர்கள், மதுபானம் வாங்க வருவோரை சமூக இடைவெளியுடன் வாங்குமாறு நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலி போடப்பட்டிருக்க வேண்டும்.
  • 2 பணியாளர்களை நியமித்து, மதுபானம் வாங்க வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்த வேண்டும்.

உள்ளிட்ட 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கவனிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.