இந்த மாவட்டத்தில் வரும் 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடக்கும் மே 4ம் தேதி மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகும். இந்த வைபவத்தை காண மதுரை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், மதுரையில் வைகை ஆற்றில் கூடி இருப்பார்கள்.

இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடக்கும் மே 4ம் தேதி மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.