இந்திய அணிக்கு 273 ரன்கள் இலக்கு !!உஸ்மான் க்வாஜா,பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் அபாரம்!!

  • இன்று  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
  • இந்த போட்டியில்  ஆஸ்திரேலிய அணி 272 ரன்கள் அடித்ததுள்ளது .

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் கடைசி இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றிபெற்றது.

கடைசி மற்றும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.இந்த போட்டி  டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்  ஆரோன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50  ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 272 ரன்கள் அடித்ததுள்ளது.ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக  உஸ்மான் க்வாஜா 100,பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 52 ரன்கள் அடித்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் 3,சமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.இதன் பின்னர் 273 ரன்களை இலக்காக கொண்டு இந்திய அணி களமிறங்குகிறது.

 

Leave a Comment