ஆசிரியர்களுக்கு டேப், கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்வு – புதிய திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!

தனது பிறந்தநாளையொட்டி ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.

முதல்வரின் 70வது பிறந்தநாள்:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முதலமைச்சரின் பிறந்தநாளுக்கு பிரதமர், ஜனாதிபதி மற்றும் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி திமுகவினர் பிரமாண்டமான பொதுக்கூட்டம் உள்ளிட பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்கள்:

இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு புதிய திட்டங்களை அறிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். அரசின் திட்டங்களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் ஆசிரியர்களுக்கு வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள். ஆதாவது, அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவார்கள் எனா அறிவித்துள்ளார்.

கல்விச்செலவு உயர்வு:

ஆசிரியர்களின் நலனை காக்க புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில், அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (டேப்) வழங்கப்படும். அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்படும் கல்விச்செலவு ரூ.50,000 வரை உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மொத்தம் ரூ.225 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment