23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தற்போது நடைபெற உள்ளது.அதன்படி வரும் பிப்ரவரி மாதம் 5 ந் தேதி கோலகலமாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. குடமுழுக்கு பணிகளானது பூர்வாங்க பூஜைகளுடன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
நேற்று குடமுழுக்கு விழாவில் காவிரி புனிதநீரானது யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குவதை முன்னிட்டு வேதிகை அமைக்கும் பணிகளில் 300 சிவாச்சாரியார்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் கோவிலின் விமான கலசங்களில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது, நேற்று வரகு தானியம் போன்றவைகள் நிரப்பி தங்கமுலாம் பூசப்பட்ட கலசங்களை கோபுரத்தில் பொருத்தும் பணியானது நடைபெற்றது. நேற்று காலை வெண்ணாற்றில் இருந்து புனித காவிரி நீரானது கலசங்களில் யானை மீது வைத்து சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக வந்தனர்.
இந்த நிகழ்வின் போது ஏராளமான பெண்கள் முளப்பாரி எடுத்தும் ஓதுவார்கள் தேவாரம் மற்றும் திருவாசகம், திருப்பன்னிசை முழங்க வந்தனர்.
யானை மீது எடுத்து வரப்பட்ட புனித நீர் குடங்களை கோவிலினுள் உள்ளே வைத்து யாக பூஜைகள் தொடங்கியது.இந்த பூஜைகள் அனைத்தும் கோவிலின் பின்புறம் உள்ள பெத்தண்ணன் கலையரங்கத்தில் இருக்கக்கூடிய மண்டபத்தில் 110 புனித நீர் குடங்களுக்கு இன்று பூஜைகள் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி இன்று முதல் குடமுழுக்கு நாளான 5- ந் தேதி வரை 8 கால பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஓதுவார்கள் தமிழில் திருமறைப்படியும் மற்றும் சிவாச்சாரியார்கள் ஆகம முறைப்படியும் மேலும் சாஸ்திரிகள் வேத முறைப்படியும் பூஜையை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கான அதிநவீன சுழல் மேஜை ஊர்தி கொண்டு வரப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் குடமுழுக்கு என்பதால் விழாவிற்கு சுமார் 5 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் பாதுகாப்புக்காக பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனது குறிப்பிடத்தக்கது.ள்ளன.
Summer Holiday: தமிழகத்தில் இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக நடந்து…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. ஐபிஎல் தொடரில் இன்றைய 40-தாவது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ்அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
IPL2024: லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…