அதிர்ச்சி…பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு கொடூர கொலை!

தஞ்சை:அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைக்குள் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மக்கள்  மட்டுமல்லாது,அதனை சுற்றியுள்ள நாகை,திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட மக்களும் சிகிச்சை சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்நிலையில்,தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு கழிவறைக்குள் இன்று அதிகாலை,பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் சிசு கொலை செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து,உடனடியாக மருத்துவர்கள் தஞ்சை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,மருத்துவமனைக்கு  விரைந்து வந்த போலீசார் அக்குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும்,இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.