நாடாளுமன்ற இரு அவைகளில் எதிர்கட்சிகள் தொடர் அமளி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் சிக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி, கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி சமீபத்தில் மத்தியில் ஆளும் தே.ஜ கூட்டணியிலிருந்து விலகிய தெலுங்கு தேசம் கட்சியும், ஆந்திர மாநில எதிர்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் தற்போது போராடி வருகிறது. அதேநேரம் தமிழக மக்களுக்குக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி அதிமுக எம்.பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தன. எதிர்கட்சிகளின் ஆதரவை இரு கட்சிகளும் பெறும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற செயல்பாடுகள் இன்று தொடங்கியபோது, அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கோஷம் எழுப்ப, மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment