தமிழகத்திற்கு நிறைய வாய்ப்புகள் வரும் : தமிழிசை செளந்தரராஜன்

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட பின்னர் சென்னை திரும்பிய தமிழிசை செளந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது தமிழிசையிடம், தமிழகத்திற்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லாததற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பினர். அதற்க்கு பதிலளித்த தமிழிசை, தமிழகத்திற்கு நிறைய வாய்ப்புகள் வரும். மோடியின் தலைமையில் பதவியேற்றுள்ள இந்த அமைச்சரவை, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றும்  என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இன்னும் பல மாநிலங்களில், பல வெற்றிகள் பாஜக குவிக்கவுள்ளது. இதனால் தமிழகம் பலம் பெறும் என்றும், அதனால் தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment