திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை குறிப்பிட்டுள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவ்வப்போது, திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதுவது வழக்க்கமான ஒன்று. அதே போல , தற்போது மறைந்த முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கிண்டி பல்நோக்கு மருத்துவமனை பிப்ரவரி 2022இல் அடிக்கல் நாட்டப்பட்டு, 15 மாதங்களில் 6 மாடி கட்டடம், 1000 படுக்கைகள் கொண்ட அதிநவீன கலைஞர் மருத்துவமனை இந்த மாதம் (ஜூன் 2023இல்) துவங்கப்பட்டு விட்டது. என தெரிவித்துவிட்டு, அதே போல மதுரையில்… என இடைவெளி விட்டு, அது உங்களுக்கே தெரியும் என 2026இல் துவங்கப்பட்டு இன்னும் கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் பற்றி மறைமுகமாக குறிப்பிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்/
வள்ளுவர் கோட்டமும்! கலைஞர் கோட்டமும்!
– அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.
விவரம்: https://t.co/rPgLkoBvjG pic.twitter.com/OcAlPpawDz
— DMK (@arivalayam) June 18, 2023