தமிழ்நாடு சார்பாக வைகோ உட்பட 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்று கொண்டனர்!

மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். அவர்களில் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், முஹம்மது ஜான் ஆகியோரும் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரும்,

திமுக சார்பில் , சண்முகம், வில்சன் ஆகியோரும், மதிமுக பொது செயலாளர் வைகோவும் பதவி ஏற்று கொண்டனர். இவர்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்று கொண்டனர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநிலங்களவை  உறுப்பினராகியுள்ளார். அவரது பெயரை குறிப்பிடுகையில் பேரவையில் உள்ள அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.