புதுச்சேரியில் விரைவில் தமிழ்மாமணி விருது வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரியில் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவையொட்டி, புதுச்சேரி அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கலைமாமணி விருதுகள் விழா நடைபெற்று வருகிறது; இவ்விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் விரைவில் தமிழ்மாமணி விருது வழங்கப்படும் என்று விருது விழாவில் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.