திமுக திருந்தாது..! தமிழ் புத்தாண்டு சித்திரையே..! – எச்.ராஜா

திமுக திருந்தாது..! தமிழ் புத்தாண்டு சித்திரையே..! – எச்.ராஜா

தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே.

தமிழகத்தில் முன்னதாக கலைஞர் ஆட்சியின் போது பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாள் தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், அதிமுக ஆட்சி அமைந்தபோது தை முதல் நாள் பொங்கல் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது.

இதனையடுத்து, தற்போது மீண்டும் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஜனவரியில் பொங்கல் கொண்டாடுவதற்கான பொங்கல் தொகுப்பு பையில் ‘பொங்கல் வாழ்த்துக்களுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திமுக திருந்தாது. இந்துக்களின் மதநம்பிக்கை மற்றும் பண்டிகை நாட்களில் அரசு தலையிடுவது வன்மையாக கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல மதசார்பின்மைக்கு விரோதமானதுமாகும். தமிழ் புத்தாண்டு சித்திரையே. கிறித்தவர்களோ முஸ்லிம்களோ இதை கொண்டாடுவதில்லை. இது இந்து பண்டிகையே. தி.மு.க வை புறக்கணிப்போம்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube