தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று!

கவிஞர் வாணிதாசன் புதுவையை அடுத்த வில்லியனூரில், ஜூலை 22-ம் தேதி, 1915-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் திருக்காமு, துளசியம்மாள் ஆவர். இவரது இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திரசாலு.

இவர் பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர். இவருடைய பாடல்கள் ” தமிழ் கவிதா களஞ்சியம்” வெளியிட்ட புதுத்தமிழ் கவிமலர்கள் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. மேலும் பல் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இவர் ஆண்டிற்கு மேலாக 34 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் ஆசிரியராக பனி புரிந்துள்ளார்.

இவர் 1935-ஆம் ஆண்டு, ஆதிலட்சுமி என்ற பெண்ணை மணந்தார். இவரது பாடல்களில் இயற்கை புனைவு சிறந்த விளங்குவதால், இவரை ‘ தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் 7-ம் தேதி, ஆகஸ்ட் மாதம், 1975-ம் ஆண்டு இம்மண்ணை விட்டு மறைந்தார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.