தமிழக தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்தது. இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என்று கேரள முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.சிக்கிய 80 தொழிலாளர்களும் கயத்தாறைச் சார்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தினர் மூணாறு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.