ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக ராணுவ வீரர் மரணம் – சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழக வீரர் லட்சுமணன் உயிரிழந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி இரங்கல். 

ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார். இவர்  மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.

இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீரின் ரஜோரி அருகே உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் இலட்சுமணன் பலியாகியுள்ளார். அவருக்கு வீர வணக்கம். குடும்பத்தாருக்கும் – நண்பர்களுக்கும் எனது ‘ அனுதாபங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment