பெங்களூர் அணியில் இருந்து தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்..!

பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரைநடைபெறவுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் போது தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்து வீச்சில் கைவிரலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அவர் நாடு திரும்பினார்.

இந்நிலையில், இன்னும் வாஷிங்டன் சுந்தர் தனது விரல் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலக்கப்பட்டுள்ளார். வங்காளத்தைச் சேர்ந்த ஆகாஷ் தீப் பெங்களூர் அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பெங்களூர் அணி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

author avatar
murugan