தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறுகிறது -அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

ஜூலை 31 ஆம் தேதி வரை தமிழக  சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றனர்.  சட்டமன்ற காங்கிரஸ்  தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வருகின்ற  ஜூன் 28ல் தொடங்கும் கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.