நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் முதல்வர் இன்று பேசினார். அப்போது, 2011 ஆம் ஆண்டில் திமுகவின் மின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி செய்தியாளரை சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், இன்று கடுமையான மின்வெட்டு உள்ளது என கேட்டதற்கு ஆற்காடு வீராசாமி பதிலளித்தார். உண்மைதான் எங்கள் ஆட்சி போ என்றால் மின் வெட்டு கூட போய் விடும் என கூறினார். அதேபோல 2011-ஆம் ஆண்டு திமுக போய்விட்டது என முதல்வர் தெரிவித்தார்.
அதேநேரத்தில் கடந்த 2011 ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் கூறினார் . கடுமையான மின்வெட்டு உள்ளது நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் தடையில்லா மின்சாரத்தை வழங்குவேன் என கூறினார். அதேபோல மூன்று ஆண்டு காலத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கியவர் ஜெயலலிதா. அந்த வழியிலேயே நடந்து கொண்டிருக்கும் அதிமுக அரசு இன்றையதினம் மின்மிகை மாநிலமாக உள்ளதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என ஸ்டாலின் கூறினார். கேரளா மற்றும் டெல்லியில் கொரோனா குறைந்துவிட்டது, அங்குள்ள முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என கூறினார். இப்பொழுது ஸ்டாலின் கேரளா மற்றும் டெல்லியை பார்க்கவும், தமிழ்நாட்டையும் பார்க்கவும் என கேள்வி எழுப்பினார்.
கேரளாவில் நாளொன்றுக்கு எட்டாயிரம் முதல் பத்தாயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கின்றன. அங்கு உள்ள மக்கள் தொகையை தமிழ்நாட்டில் பாதி அளவுதான் ஆனால் நேற்று முன்தினம் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மட்டும்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.
ஆகையால், தமிழ்நாட்டில் சரியான முறையில் நடவடிக்கை எடுத்ததால் தான் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் சொன்ன ஆலோசனையை தவறாமல் பின்பற்றி காரணத்தினால் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் குறைந்துள்ளது என தெரிவித்தார்.
Today horoscope- பங்குனி மாதம் ஆறாம் தேதி[ மார்ச் 19, 2024 ]இன்றைக்கான ராசி பலன்களை இங்கே காணலாம். மேஷம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும்…
Petrol Diesel Price : இந்தியாவில், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப,…
Puducherry: இந்தியாவையே உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர்…
Wanindu Hasaranga: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இலங்கை கிரிக்கெட் வீரர் வனிந்து ஹசரங்கா திரும்ப பெற்றுள்ளார். 26 வயதான வனிந்து ஹசரங்கா இலங்கை…
OPS: அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுக-வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை…
PMK - BJP: மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும்…