தமிழகத்தில் 4 மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக அதன் ஆணையர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிரடியாக ஐபிஎஸ், ஐஏஎஸ், காவல் ஆய்வாளர், ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்து வருகிறது. சமீபத்தில் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், ஆவடி உள்ளிட்ட 4 மாநகராட்சியின் ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக முஜிபூர் ரஹ்மானை நியமனம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த சிவசுப்பிரமணியன் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல், ஆவடி மாநகராட்சி ஆணையராக கே.சிவகுமார், தஞ்சை மாநகராட்சி ஆணையராக சரவணகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…
Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…