#BREAKING: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!

#BREAKING: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு..!

வைகை அணையிலிருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் 16452 ஏக்கர் மற்றும் மதுரை வடக்கு வட்டத்தில் 26792 ஏக்கர், ஆக மொத்தம் 45041 ஏக்கர் நிலங்களுக்கு 04.06.2021 முதல் 120 நாட்களுக்கு வைகை அணையிலிருந்து 6739 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan
Join our channel google news Youtube