தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் ஆய்வு..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்ததன் காரணமாக பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு குடியிருப்பு இடங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீரை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

அதிலும், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது 90% மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறார்.

author avatar
murugan