முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதி இல்லை மதம் இல்லை..! பால பிரஜாபதி அடிகளார் பேச்சு.!

விழுப்புரத்தில் தமிழக முதல்வருக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது . தமிழ் இன உணர்வு இருக்கிறது என பால பிரஜாபதி அடிகளார் பேசியுள்ளார். 

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் காமினிஸ்ட கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பால பிரஜாபதி அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய அய்யா வழி இந்து சமய தலைவர் பால பிரஜாபதி அடிகளார், நான் இங்கு வந்ததற்கு காரணம் நன்றி சொல்வதற்கு தான். எல்லா சாமிகளும் ஜாதிகள் இல்லை என கூறும் இடதுசாரிகள் தான். ஆனால், அதனை பின்பற்றுபவர்கள் வலதுசாரிகளாக இருக்கின்றனர் என குறிப்பிட்டு பேசினார்.

மேலும், எல்லா ஊர்களிலும் சமூக நீதியை காப்பாற்றும் சமூகம் தமிழ் சமூகம். நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜாதி கிடையாது. மதம் கிடையாது தமிழ் இனம் இருக்கிறது. இன உணர்வு இருக்கிறது என குறிப்பிட்டு பேசி முதல்வருக்கு தனது நன்றியை தெரிவித்து பேசினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.