அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்ப்பு !

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்ப்பு !

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவை காட்டும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஜனவரி மாதம் 1 ம் தேதி முதல் ஆசிரியர் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. மேலும் அனைத்து  பள்ளிகளிலும் இந்த முறையை கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் ஆங்கிலம் மொழி மட்டும் இருக்கும் வகையில் இருந்தது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில் இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் இந்தி மொழி இருந்தது. இதற்க்கு பல தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது போன்று இனி தவறுகள் நடக்காது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.

 

 

இந்நிலையில், அரசுப் பள்ளியில் இருக்கும் பயோமெட்ரிக் கருவியில் புதிதாக தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது.  புதிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் கருவியில் தமிழ் உட்பட 9 மொழிகள் இருக்கும்.

 

Join our channel google news Youtube