ஊழல் குறித்து பேசும் கமல், திமுக பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாதது ஏன்?- அமைச்சர் பாண்டியராஜன்

தேர்தல் பிரச்சாரங்களில் ஊழல் குறித்து பேசும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்? என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாண்டியராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திடிரென வந்து வேகமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார். நல்லாட்சி தருவேன் என்று கூறி, அறிக்கையெல்லாம் வெளியிடுகிறார்கள். ஆனால், திமுக பற்றி ஒரு வார்த்தை கூட கமல்ஹாசன் பேசாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனென்றால் ஊழலின் ஒட்டு மொத்த உருவமாக இன்றைக்கு இருக்கிறது திமுக தான். அதுமட்டுமல்லாமல் வாரிசு அரசியல் என்றாலே திமுக தான் என்று பேசப்படும் காலத்தில், ஒரு வார்த்தை கூட திமுக குறித்து பேசாதது என்பது கமல்ஹாசன் ஒரு வகையில், திமுகவன் பி-டிமாகத்தான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்