அதிர்ச்சி..!கருப்பு,வெள்ளை பூஞ்சை தொற்றுகளைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை ..!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மஞ்சள் பூஞ்சை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கருப்பு,வெள்ளை பூஞ்சை தொற்றுகளைத் தொடர்ந்து மஞ்சள் பூஞ்சை பரவுவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சகட்டத்தை எட்டி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது. அதாவது,கொரோனா நோயாளிகளுக்கு ‘ஸ்டீராய்டு’ மருந்துகள் அதிக அளவில் செலுத்தப்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து … Read more