சத்தீஸ்கரில் யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்தாரி மாவட்டத்தில் காட்டு யானை ஒன்று வயதான மூதாட்டியை (61 வயது) தாக்கியுள்ளது. இது குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி, இந்த மூதாட்டி சிங்பூர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள பலுச்சுவா கிராமத்தில் வசிப்பவர். நேற்று இரவு இந்த மூதாட்டி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோபத்தோடு வனப்பகுதி நோக்கி சென்றுள்ளார். அங்கு காட்டு யானை தாக்கியதில் அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.