கல்யாண வீட்டுல சாப்பிட்டது தப்பாப்பா ….! 50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

கர்நாடக மாநிலத்தில் நடந்த திருமண விழாவில் உணவு சாப்பிட்ட 50 க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் உள்ள அலடா ஹள்ளி எனும் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண விழா ஒன்று நடைபெற்று உள்ளது. இந்த விழாவில் அப்பகுதியிலுள்ள பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த திருமண விழாவில் தயாரித்து வைத்திருந்த உணவுகளை சாப்பிட்ட நூற்றுக்கணக்கானோருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து உள்ளனர். அதிலும் 50 … Read more

“திருமண மண்டபங்களில் நடந்த திருமணத்திற்கு நிதியுதவி கிடையாது” – தமிழக அரசு ..!

திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் அனைத்து திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் ரூ.25,000 மற்றும் ரூ.50,000 திருமண நிதியுதவி தொகையுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கும் திட்டம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்கு தாலிக்கு தங்கம் உதவி தொகை கிடையாது என்று … Read more

5 நிமிடத்தில் அட்டகாசமான கல்யாண வீட்டு ரசம் செய்வது எப்படி…?

சமையலில் மிக ஈசியாக செய்யக்கூடிய ஒன்று ரசம் தான். ஆனால், பலருக்கு இந்த ரசத்தை ஒழுங்காக வைக்க தெரியாது. எவ்வளவு தான் முயற்சித்தாலும் ரசம் மட்டும் சுவையாக வராது. ரசத்தில் பல வகைகள் உள்ளது. அதிலும் கல்யாண வீட்டில் வைக்க கூடிய ரசம் பலருக்கும் பிடிக்கும். இந்த ரசத்தை சுலபமாக சுவையாக எப்படி வைப்பது என அறியலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் துவரம்பருப்பு மிளகு சீரகம் பூண்டு தக்காளி புளி உப்பு கொத்தமல்லி கடுகு வெந்தயம் பெருங்காயம் … Read more

மணப்பெண்ணின் தாலி தங்கத்தை திருடிய புரோகிதர் – வீடியோவில் அம்பலம்!

தெலுங்கானாவில் திருமணம் நடத்தி வைக்க வந்த புரோகிதர் ஒருவர் மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கமணி குண்டுகளை திருடிச் சென்றுள்ளது வீடியோவில் அம்பலமாகியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள துப்ரான் எனும் பகுதியில் கடந்த 16ம் தேதி ஞான சங்கர் தாஸ் மற்றும் வசந்தா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மந்திரங்கள் முழங்க புரோகிதர் ஒருவர் வந்து திருமணம் செய்து வைத்துள்ளார். அப்போது மணப்பெண்ணின் தாலியில் கோர்க்க கூடிய தங்கமணி குண்டுகள் அனைத்தும் மஞ்சள் … Read more

வித்தியாசமான முறையில் 60 அடி ஆழத்தில் கடலுக்கடியில் நடைபெற்ற கல்யாணம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடலுக்கடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் நடைபெற்ற புதுமண தம்பதிகளின் வித்தியாசமான திருமணம் வாழ்த்துக்களை பெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீலாங்கரை எனும் பகுதியில் உள்ள ஜோடிகள் இருவர் இந்து முறைப்படி கடலுக்கு அடியில் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் மாலை மாற்றிக்கொண்டு வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தனது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டும் என ஆசைப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சின்னமலை ஸ்வேதா எனும் கோவையை சேர்ந்த பெண்ணுடன் … Read more

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ பட நடிகைக்கு திருமணம்! புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை ஆத்மீயாவுக்கும், கண்ணூரை சேர்ந்த கப்பல் துறையில் பணியாற்றி வரும் சானுப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.  நடிகை ஆத்மீயா தமிழ் சினிமாவில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மனம் கொத்தி பறவை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் போங்கடி நீங்களும் உங்க காதலும், வெள்ளை யானை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர் மலையாளப் படங்களில் நடித்து மலையாளத் திரையுலகிலும் … Read more

திருமணத்திற்கு மொய் தான் 10 லட்சம் வரும்னு பாத்தா.,ரூ.10 லட்சம் அபராதம் வந்த கவலை சம்பவம்!

லண்டனில் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக திருமண உரிமையாளர்க்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் கவலை அளித்துள்ளது. லண்டன்: திருமண விழாவில் 400 பேருக்கும் மேல் கலந்து கொண்டதால் கொரோனா ஊரடங்கை மீறலுக்காக போலீசார் அந்த தம்பதினர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர். அதாவது பிரிட்டிஷ் தலைநகரின் வடக்கே ஸ்டாம்போர்டு ஹில், எகெர்டன் சாலையில் உள்ள யேசோடே ஹடோரா பள்ளிக்குள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் விருந்தினர்கள் ஒன்றாக கூடியிருப்பதை கண்டு காவல்துறை இந்த அபராத்தை … Read more

எந்த வயதில் திருமணம் செய்வது நல்லது தெரியுமா?

இந்த பதிவில், திருமணம் செய்து கொள்ள சரியான வயது எதுவென்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். முன்னாடி உள்ள காலங்களில் வாழ்க்கையின் முறை மிகவும் எளிதாக இருந்தது. முன்னாடியேல்லாம் காதல் பின்னர் கல்யாணம் அதன்பின் குழந்தை என இருந்தது. ஆனால், இப்போ உள்ள காலத்தில் உறவுகள் மிகவும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. திருமணம் முடிக்காமலேயே இளைஞர்கள் சேர்ந்து வாழ்வதும், குழந்தைகள் வேண்டுமென்ற எண்ணத்துடனும் வாழ தொடங்கிவிட்டனர். சமீபத்திய ஆய்வுகளின் படி, நம் இந்திய ஆண்கள் பெரும்பாலும் 25 வயதிலும், பெண்கள் … Read more

ஒரே பிரசவத்தில் பிறந்த ஐவர்.! ஒரே நாளில் விமர்சையாக நடைபெற்ற மூவர் திருமணம்.!

கேராளாவின் திருவனந்தபுரத்தில் பிரேம் குமார் மற்றும் ரமாதேவி தம்பதியருக்கு கடந்த 1995ல் ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. உத்ரா, உத்ரஜா, உத்தாரா, உத்தாமா மற்றும் உத்ரஜன் என்ற பெயருடைய ஐவரையும் பலருடைய உதவியாலும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வந்தனர். அதனையடுத்து கடந்த 2005ஆம் ஆண்டு பிரேம்குமார் மரணமடைந்ததை அடுத்து பல தடங்கல்களை தாண்டி குழந்தைகளை படிக்க வைத்தார். கேரளாவின் மிகவும் பிரபலமான இந்த ஐவரையும் பஞ்சரத்னங்கள் என்று அழைத்து வருவது … Read more

அட வெங்காயத்திற்கு வந்த வாழ்வா? புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள்!

புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள். பருவமழை காரணமாக, வெங்காயத்தின் வரத்து குறைந்த நிலையில், வெங்காயவிலை வானை முட்டும் அளவுக்கு கிடுகிடு என உயர தொடங்கியது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூ செண்டு போல் அலங்கரித்து, மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.