விருப்பமனு தாக்கல் செய்தார் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன்…!

விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.  தமிழகத்தில் இன்னும் கொஞ்ச நாட்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில், தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து, விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.