#BREAKING: வரும் 17ம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

தமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.17 நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. வரும் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழகத்தில் உள்ள துணைவேந்தர்கள் மாநாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளது. நான் முதல்வர் திட்டத்தின் அடிப்படையில் பாடத்திட்டம் செயல்படுத்த துணைவேந்தர்கள் மாநாடு என்றும் மாநில அரசின் உரிமைகளை பயன்படுத்தி துணைவேந்தர் மாநாடு நடைபெறுவதாகவும் சென்னையில்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.