ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு.. அதிர்ச்சியில் மக்கள்.!

ஜம்மு காஷ்மீரில் கடந்த 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த 2 குண்டு வெடிப்பால் 2 பேர் காயம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் கடந்த 8 மணி நேரத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உதம்பூர்-டிஐஜி ரியாசி ரேஞ்ச் கூறுகையில், முதலாவதாக புதன்கிழமை(செப் 29) இரவு 10.30 மணியளவில் பெட்ரோல் பம்ப் அருகே நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் குண்டு வெடிப்பு நடந்தது என்று கூறினார். இதனைத்தொடர்ந்து இன்று … Read more

ஜம்மு காஷ்மீரீல் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் பலி 13 பேர் காயம்..!

உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே ரெஹ்ரி பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 13 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பிற்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.  இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து..!

ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு -காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஷிவ்கர் தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது என கூறப்படுகிறது. ஹெலிகாப்டரில் இரண்டு நபர்கள் இருந்ததாகவும், உதம்பூர் பகுதியில் கடும் மூடுபனி காரணமாக அப்பகுதியில் பார்வை குறைந்துள்ளதாகவும், இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மோசமான வானிலை காரணமாக … Read more

இராணுவ லாரி கவிழ்ந்ததில் 2 வீரர்கள் படுகாயம்..!

உதம்பூரிலிருந்து ஸ்ரீநகர் நோக்கி இராணுவ லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது, இராணுவ லாரி சர்மோலி அருகே நர்சு நாலா என்ற இடத்தில் நடந்த விபத்தில் இராணுவ லாரி பள்ளத்தில் கீழே விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் உத்தம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இராணுவ வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன.