தூத்துக்குடியில் சோரீஸ்புரத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நேற்று போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி, பல்வேறு கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள சோரீஸ்புரம் கிராம மக்கள் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே திரண்டு போராட்டத்தை தொடங்கினர். அங்கு மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி கோ‌ஷம் எழுப்பினர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி கிராம மக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று மனு கொடுத்தனர். அந்த மனுவில் … Read more

பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகை..!

பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி  ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகையிட்டனர். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செங்கோட்டை, ரெகுராமபுரம், வெளவால்தொத்தி, புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இக்கிராம விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். போதிய மழை இல்லாததால் விளைச்சல் இன்றி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் பயிர்காப்பீடு … Read more

தூத்துக்குடியில் சோமு செம்பு அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம்..!

தூத்துக்குடி மாவட்டம் பிரைன்ட் நகர் 7வது தெருவில் உள்ள சுந்தரவல்லி திருமண மண்டபத்தில் வைத்து சோமு செம்பு அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி ஆர்த்தி மருத்துவமனை இணைந்து நடத்தும்  இலவச மருத்துவ முகம் நடைபெற்றது. இம்முகாமிற்கு DYFI இரத்ததான கழகத்தின் தலைவர் கே.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.இதற்கு சோமுவின் தந்தை சுப்பிரமணியன் மற்றும் செம்புவின் தாயார் ராஜாத்தி முன்னிலை வகித்தனர் . இதில் மருத்துவர்கள் பி. சிவனாகரன் பொது மருத்துவர் ,பால்சாமி குழந்தை மருத்துவர்,வசந்தகுமார் குழந்தை மருத்துவர் ,பாண்டியன் கண் … Read more