நாட்டுக்கே அவமானம்., இது நிச்சயம் வரலாற்றில் இருக்கும் – ஒபாமா கண்டனம்

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம் முன்னாள் அமெரிக்கா அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாமல் ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பொய்யான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர். அவர்கள் போராடுவது எதிர்பார்த்த ஒன்றுதான். நாடாளுமன்றத்தை முற்றிகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம். இது நிச்சியம் வரலாற்றில் இருக்கும் என முன்னாள் அதிபர் ஒபாமா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையை வெளியிட்டு, தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளைமாளிகையில் தேர்தலில் வெற்றி … Read more

நான்கு பேர் உயிரிழப்பு., வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது – பிரதமர் மோடி

வாஷிங்டன் டி.சி.யில் நடைபெறும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்கா வாஷிங்டனில் டி.சி.யில் நடைபெறும் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்திகள் வேதனை அளிக்கிறது. அமெரிக்க அதிபர் அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ … Read more

வெள்ளை மாளிகைக்குள் புகுந்த ட்ரம்ப் ஆதரவாளர்கள் – அமெரிக்காவில் பதற்றம்!

ட்ரம்பின் ஆதரவாளர்கள் வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் புகுந்ததால் பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றிருந்தார். இந்த வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் நேற்று அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றபோது திடீரென கட்டிடத்திற்கு வெளியே ட்ரம்பின் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டனர். மறுபக்கம் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், முடிவுகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் … Read more

டிரம்ப் நிர்வாகம் புதிய நிர்வாகத்திற்கு முழுமையான தகவல்களை வழங்க மறுக்கிறது – ஜோ பைடன் குற்றசாட்டு!

பல்வேறு துறைகளில் ட்ரம்பின் நிர்வாகம் தங்களது குழுவினருக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டிரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர் ஏற்கனவே ட்ரம்பின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவர் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் … Read more

ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகள் – ஜோ பைடன் ட்வீட்

தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது என்று அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம், இன நீதி வரை நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. அடுத்தாண்டு சீக்கிரம் வரட்டும், வீணடிக்க நேரம் இருக்காது. அதனால்தான் நானும் எனது அணியும் முதல் நாளில் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம் என்று பைடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காலவரையறை … Read more

அமெரிக்காவின் உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி! எதற்காக இந்த விருது கொடுக்கப்பட்டது?

அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார். அமெரிக்காவின் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘லிஜியன் ஆஃப் மெரிட்’ என்ற விருதை, அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அறிவித்துள்ளார். இந்த விருதினை அமெரிக்காவுக்கான இந்திய தூதர், பிரதமர் மோடியின் சார்பில் இந்த விருதினை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையனிடம் பெற்றுக்கொண்டுள்ளார். பிரதமர் … Read more

டொனால்ட் ட்ரம்ப் ஒரு தீவிரவாதி! ஈரான் அதிபர் அதிரடி!

ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோதி. ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.  நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை, ஜனநாயக கட்சி வேட்பாளரான  பைடன்   வென்றுள்ளார். இதனை அடுத்து, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அதிபர் ஹஸன் ரூஹானி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சட்டவிரோதி என்று  அழைத்தார். மேலும் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து … Read more

டிரம்ப், ஜோ பிடன் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்.. 4 பேர் காயம்..!

அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றிபெற்றார். தனது தோல்வியை ஏற்காத டிரம்ப், தேர்தலில் தோல்வியடையவில்லை எனவும், தேர்தலில் மோசடி குற்றச்சாட்டுகள் நடந்துள்ளது என கூறிவருகிறார். டிரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கிடையில், ஜோ பிடனின் வெற்றியை மாற்றியமைக்க முயன்ற குடியரசுக் கட்சியினரின் மனுக்களை அமெரிக்க உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்நிலையில், அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்கு … Read more

வளர்ப்பு நாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு!

அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் தனது வளர்ப்பு நாயுடன் விளையாடும் போது தவறி விழுந்ததில், காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் ஜனவரி மாதத்தில் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். தற்போது பைடனுக்கு 78 வயதாகிறது. இந்நிலையில், ஒரு நாயை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்கு டைகர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பைடன், டைகருடன் விளையாடும் போது, கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து … Read more

கொரோனா தடுப்பூசி: “அடுத்த வாரம் முதல் விநியோகிக்கப்படும்”- அதிபர் டிரம்ப்!

அமெரிக்காவில் கொரோனாக்கு எதிரான தடுப்பூசி விநியோகம், அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்குடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக தான் கண்டுபிடித்த … Read more