8 கால்களுடன் பிறந்த ஆடு.. பிறந்த அரை மணி நேரத்தில் மரணம்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் எட்டு கால்கள், இரண்டு உடல்கள் மற்றும் ஒரு தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டியை அங்கிருந்தோர் வியப்புடன் பார்த்தனர். அப்பகுதியில் பெரிய பள்ளிவாசல் அடுத்துள்ள சுண்ணாம்புக்கார வீதியில் அப்துல் கவுஸ் என்பவர் அவரது வீட்டில் ஆட்டுப் பண்ணைகள் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று மூன்று குட்டிகளை ஈன்றது. நான்காவது குட்டியை எடுத்துக் கொண்டிருக்கும் போது முதலில் எட்டு கால்கள் வெளியே வந்தது. இதனைக் கண்ட அவரது வீட்டார்கள் வியந்து … Read more

தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் நாய்.. வைரலாகும் புகைப்படம்..!

டெல்லியில் உள்ள ஒரு பிரதான சாலையில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டுருந்தார். அவர், அவருக்கு பின்னே அமர்ந்த நாய்க்கு அவர் தலைக்கவசம் அணிந்து அழைத்து வந்தார். இது குறித்த விடியோவை டெல்லி போக்குவரத்துக்கு கழகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் அவர்கள், நல்ல பையன் இந்த நாய், இந்த நாயை போல் அனைவரும் இருங்கள் என குறிப்பிட்டிருந்தனர். தற்பொழுது அந்த வீடியோ, சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, நொடியில் தப்பித்த சிறுத்தை…வைரலாகும் வீடியோ..!

கழுதை புலி வருவதை கவனித்த சிறுத்தை, விரைவில் செயல்பட்டு, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒரு நொடியில், கழுதை புலிக்கு மேல் குதித்து ஒரு மரத்தில் ஏறி உயிர்பிழைத்தது. அந்த விடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்த், அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், “சில நேரங்களில் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளி ஒரு தாவல். வயதுவந்த சிறுத்தைகளை அவ்வப்போது அபாயகரமான தாக்குதல்களால் தாக்கும் ஒரே விலங்குகள் சிங்கம் மற்றும் கழுத்தை புலி மட்டுமே ஆகும். … Read more

விமான பயணிகளே…துணிகளுக்கான செலவை குறைக்க வேண்டுமா? இந்த பெண்ணை போன்று செய்யுங்கள்..!

துணிகளுக்கான செலுத்தும் செலவை குறைப்பதற்காக, பிலிப்பைன்ஸைச் நாட்டை சேர்ந்த ஜெல் ரோட்ரிக்ஸ் என்ற பெண்மணி, தனது சூட்கேஸில் அடைத்து வைத்திருந்த அணைத்து ஆடைகளையும் அணிந்தார். இதன் மூலம் அவர் சூட்கேசின் எடை குறைந்தது. இது குறித்த விளக்கத்தை அவரின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டீருந்தார். அதில், விமான நிலையத்தில் உள்ள கவுண்டரில் தனது சாமான்களை சரிபார்க்கும் போது, கேரி-ஆன் லக்கேஜ் அதிகபட்ச எடை 7 கிலோவை கடந்தால் பணம் கெட்டவேண்டும் என விமான நிலைய அதிகாரி கூறினார். அதற்க்கு … Read more

மத்தியபிரதேஷில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தீ விபத்து..!

மத்திய பிரதேச பகுதியில் உள்ள இந்தூர் மாவட்டத்தில் உள்ள விஜய் நகரில் கோல்டன் கேட் என்ற பிரபல நட்சத்திர விடுதி உள்ளது. ஐந்து அடுக்கு மாடிகளை கொண்ட இந்த விடுதிக்கு அதிகளவில் மக்கள் வந்து செல்வர். இந்நிலையில், அந்த விடுதியில் திடீரென தீ பற்றிக்கொண்டது. அறையில் உள்ளே ஏற்பட்ட தீ, ஜன்னல்வழியே மடமடவென அருகில் இருந்த அடுத்த அடுத்த அறைகளுக்கு பரவியது. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சில … Read more

"சூரைப்போற்று" படத்திற்காக பிஸியாக இயங்கிவரும் G.V.பிரகாஷ்..!

தற்பொழுது நடிகர் சூர்யா நடித்து வெளிவந்த படம், காப்பான். இந்த படத்தை தொடர்ந்து, இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வரும் சூரைப்போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டேயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தீவிரமாக G.V.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். மேலும், இது அவருக்கு 70ஆவது படம். டிசம்பர் மாதம் வெளிவரவுள்ள இந்த படத்திற்கு இசைசேர்ப்பு பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு … Read more

சந்தானத்தை போல் நிற்க முயன்ற போதை பிளிப்ஸ்..!

என்றென்றும் புன்னகை என்ற படத்தில் நகைச்சுவை நாயகனாக நடித்தவர், சந்தானம். அந்தப் படத்தில் இவர் போதையில் சாய்ந்து கொண்டே நடந்து வருவது போல் ஒரு காமெடி வரும். அந்த காமெடியை மிஞ்சும் அளவுக்கு ஒரு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. போதையில் தள்ளாடி வரும் ஒரு நபரை அவரது நண்பர் பைக்கில் அழைத்து செல்ல வந்தார். ஆனால், அவருக்கோ தலைக்குமேல் போதை ஏறியதால், அந்த பைக்கில் ஏறி அமர முடியவில்லை. வண்டியை சுற்றி அங்குமிங்குமாய் நகர்ந்து, கீலே விழுந்து, … Read more

சாப்பாடு இல்லாதால், துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் காவலராக பணிப்புரிந்து வருபவர், சந்தீப். இவர் அங்குள்ள ஒரு தபாவில் வழக்கமாக சாப்பிடும் செல்வார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அங்கு சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது கடையின் உரிமையாளர் நேரமாகிவிட்டதால் உணவு இல்லை எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த கான்ஸ்டபிள் சந்தீப், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கடை உரிமையாளரை நோக்கி சுட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டு அவர் மீது படவில்லை. இதனை தொடர்ந்து … Read more

பிரபல வீரர் கவுரவ் கில்லின் கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில் இந்திய தேசிய ரேலி என்ற கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம், இந்தியா முழுவதும் ஆறு சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இந்த பந்தயத்தின் முதல் மற்றும் இரண்டாம் சுற்று, தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் கோவையில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து மூன்றாம் சுற்று போட்டியானது, ராஜஸ்தானில் உள்ள பார்மனில் நடைபெற்றது. இந்த போட்டியில் 53 அணிகள் பதிவு செய்தது. இந்நிலையில், தொடர்ந்து வெற்றிகளை சந்தித்து வந்த டெல்லியை சேர்ந்த பிரபல வீரான … Read more

அல்பேனியா நாட்டில் தொடர் நிலநடுக்கம்..! 68 பேர் காயம்!

அல்பேனியா நாட்டின் துறைமுக நகரம், டூயுரஸ். இங்கு நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.05 மணிக்கு திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் சேதமடைந்தது. மேலும் இதில் சிக்கி 68 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, மேலும் சில நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமாகின. இது 5.4 ரிக்டர் அளவில் பதிவானது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், … Read more