பரபரப்பு.. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – ரயிலுக்கு தீ வைப்பு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம். இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அதன்படி, முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிமுகம் செய்திருந்தார். இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் … Read more

உங்களுக்கு இருப்பது ஆன்மீகத்தின் பக்தியுமல்ல, தேச பக்தியுமல்ல… தனியார் பக்தி மட்டுந்தான்..! – சு.வெங்கடேசன் எம்.பி

இரயில்வே அமைச்சர் சென்னையில் பேசியது அத்தனையும் பொய்யா? என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது என சு.வெங்கடேசன் எம்.பி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜூன் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வட கோவையில் இருந்து சீரடிக்கு முதல் தனியார் ரயில் இயங்க ரயில்வே அனுமதித்துள்ளது. கோவையைச் சேர்ந்த எம் என் சி பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் இதனை இயக்கவுள்ளது. ரயில் வண்டி ரயில்வேக்கு சொந்தம் … Read more

கோர விபத்து; தடம் புரண்ட ரயில்… 4 பேர் பலி! 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்.!

ஜெர்மனியில் பவேரியாவில் பிராந்திய பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் காயம். தெற்கு ஜெர்மனியில் ஆல்ப்ஸ் மலையில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் சுமார் 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அதாவது, தெற்கு ஜெர்மனியில் ஆல்ப்ஸ் மலையில் அதிகளவிலான மாணவர்களுடன் முனிச் நோக்கிச் சென்ற பிராந்திய ரயில் பர்கிரேனில் சிறிது நேரத்திற்குப் பிறகு தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது. கார்மிஷ்- பார்டென்கிர்சென் என்ற ரிசார்ட் நகரத்திற்கு வெளியே … Read more

இனிமேல் ரயில்களில் லக்கேஜ் எடுத்து சென்றால் கட்டணம்….! – ரயில்வே நிர்வாகம்

ரயில்களில் பயணிகள் அதிகமாக எடுத்து செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம்  அறிவிப்பு. ரயில்களில் பயணிகள் அதிகமாக எடுத்து செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஏசி முதல் வகுப்பில் 70 கிலோ, ஏசி2-டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ, ஏசி3-டயர் படுக்கை, ஏசி இருக்கை 40 கிலோ, இரண்டாம் வகுப்பில் 40 கிலோ வரையும் உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொது … Read more

தாமதமெனினும் வரவேற்கிறோம் ! – சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்.பி வரவேற்பு தெரிவித்து ட்வீட்.  மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து. சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தாமதமெனினும் வரவேற்கிறோம் ! மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட 6 இரயில்களில் ஏசி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் வழங்கும் சேவை மீண்டும் … Read more

தண்டவாளத்தில் படுத்துக்கிடந்த போன் பேசிய பெண்ணை கடந்து சென்ற ரயில் – வீடியோ உள்ளே..!

ரயில் ஒன்று மிக வேகமாக தண்டவாளத்தை கடந்து செல்லும் பொழுது பெண் ஒருவர் தொலைபேசியில் பேசியவாறு தண்டவாளத்தில் படுத்து கிடக்கிறார். ரயில் கடந்து சென்றதும் அப்பெண் சாதாரணமாக எதுவும் நடக்காதது போல தொலைபேசியில் பேசியவாறே அந்த இடத்தை கடந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபென்சு கப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளளர். இதோ அந்த வீடியோ, फ़ोन पर gossip, ज़्यादा ज़रूरी … Read more

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட இளம் ஜோடிகள்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரஷித்புரா எனும் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளம் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி வழியே சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவர்கள் யார் என இன்னும் சரியாக அடையாளம் கண்டு பிடிக்கப் படவில்லை எனவும் … Read more

மக்களே…இனி ரயில் பயணங்களில் இதை செய்யாதீர்கள்;மீறினால் அபராதம் – ரயில்வே நிர்வாகம் அதிரடி உத்தரவு!

ரயில்களில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினாலோ அல்லது மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்டாலோ அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே  நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக ரயில் பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகவே உள்ளது.ஏனெனில்,குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும்போது பாட்டு பாடுவது,சத்தமாக பேசி மகிழ்வது , அரட்டை அடிப்பது என அனைத்திற்கும் ஏதுவாக இருக்கும்.எனினும்,அதே சமயம் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில்,ரயில்களில் பயணம் … Read more

#Breaking:ஜன.10 ஆம் தேதி முதல்…ரயிலில் பயணிக்க இவை கட்டாயம்;இல்லையென்றால் ரூ.500 அபராதம் – தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!

சென்னை:ஜன.10 ஆம் தேதி முதல் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை புறநகர் மின் ரயில்களில் பயணிப்பதற்கான புதிய கட்டுப்பாடுகளை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அதன்படி,புறநகர் மின் ரயில்களில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும்,ரயில் நிலையத்தில் அல்லது பயணம் செய்யும்போது முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. … Read more

இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ரயில் மேம்பாலம் பணிகள் நிறைவடைத்தை அடுத்து இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு. வேலூர் காட்பாடி அருகே திருவலம் ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டதால் மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. தூண்களில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு பிறகு மேம்பாலத்தில் ரயில் ஓட தொடங்கியது. இன்ஜின், சரக்கு ரயிலை தொடர்ந்து முதல் பயணிகள் ரயிலாக சென்னை – திருவனந்தபுரம் ரயில் புறப்பட்டு சென்றது. விரிசல் ஏற்பட்டு சீரமைக்கப்பட்ட மேம்பாலம் … Read more