குட்நியூஸ்…அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும்….இத்திட்டம் – தமிழக அரசு அரசாணை!

சென்னை:அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி,தமிழக அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் காப்பீட்டு … Read more

#Breaking: பிப். 25 முதல் போக்குவரத்துக்கு ஊழியர்கள் ஸ்ட்ரைக்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் போக்குவரத்துக்கு கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடு எட்டவில்லை. இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி … Read more

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் ! அரசு குழுவுடன் பேச்சுவார்த்தை நடந்த பாமக முடிவு

வன்னியர் இடஒதுக்கீடு  குறித்து பிப்ரவரி 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் அழைப்பு பாமக ஏற்றுள்ளது. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இதனிடையே தான் இன்று பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் , வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு குழுவுடன் … Read more

#BREAKING : அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாள் பணியாற்றலாம் – தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாள் பணியாற்றலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது,  அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றலாம்  .18-ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் . அரசு … Read more

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு – உயர்நீதிமன்றம் ஆணை!

சென்னையில் நாளை நடைபெறவிருந்த ஆசிரியர்கள் பணியிட மாறுதல்களுக்கான கலந்தவை ஒத்திவைக்ககோரி உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த புதிய அரசாணையையும் தடை செய்வதாக அறிவித்துள்ளது.   ஒவ்வொரு வருடமும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் பணி மாறுதல் பெற விரும்பும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான கலந்தாய்வு நாளைய தினம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்து கலந்தாய்வு நடத்துவதற்கான தனி அரசாணையையும் வெளியிட்டது. இந்நிலையில், தற்போது திடீரென … Read more

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிகாரிகளே காரணம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !

தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு அரசு அதிகாரிகளே காரணம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். பல இடங்களில் பொதுமக்கள் மோட்டார் பயன்படுத்தி திருட்டுத்தனமாக குடிநீரை எடுக்கிறார்கள்.இதனை நகராட்சி அதிகாரிகளோ ஊராட்சி செயலாளர்களோ யாரும் கண்டுகொள்வதில்லை என்றும் இதனாலே இவ்வாறான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தண்ணீர் பஞ்சம் என்பது செயற்கையாக தான் தென் மேற்கு பருவமழை பெய்யும் சூழலில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்று கூறியுள்ளார்.  உள்ளாட்சி … Read more

ஆண்கள் டி-சர்ட்,ஜீன்ஸ் அணியக்கூடாது,பெண்கள் துப்பட்டா போடாமல் வேலைக்கு வராக்கூடாது- தமிழக அரசு அரசாணை

அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு ஆடைக்கட்டுப்பாடு தொடர்பாக அரசாணை வெளியிட்டுள்ளது. ஆடைக்கட்டுப்பாடு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஓன்று ஆகும்.அதிலும் குறிப்பாக அலுவலக பணிபுரிபவர்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த அரசாணையில், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் வேஷ்டி போன்ற தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளை அணிந்து அலுவலகம் வரலாம்.ஆண் ஊழியர்கள் டி-சர்ட்,ஜீன்ஸ் போன்ற சாதாரண உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் .பெண் ஊழியர்கள் புடவை, … Read more