#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு;அரசு துறைகளில் புதிய தளர்வுகள்..!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக அரசு துறைகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் வருகின்ற ஜூன் 28 ஆம் தேதி வரை  ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில்,தொற்று குறைவாகவுள்ள 23 மாவட்டங்களில்,அரசு துறைகளில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். சார்பதிவாளர் அலுவலகங்கள் முழுமையாக இயங்க அனுமதிக்கப்படும்.