தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு -தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,சத்யபிரதா சாகு, பீலா ராஜேஷ், கார்த்திகேயன் , பங்கஜ் குமார் பன்சால்,ஹர்ஷாகே மீனா ஸ்வர்ணா, ஆஷிஷ் வச்சானி உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு முதன்மை செயலாளர்களாக பதவி உயர்வு கிடைத்துள்ளது. அதேபோல, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்ய பிரதா சாகு  இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது