மீண்டும் நாடாளுமன்ற தேர்தல்! வேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெற வில்லை. தற்போது மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட பிரதான காட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக தீபலட்சுமி என்பவர் போட்டியிட உள்ளார். என்பதை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய துரைமுருகன் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு!

நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று தெலுங்கானா முதல்வர் முதல்ர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆனது. ஆளுங்கட்சி தலைவர்கள் பலர் ஸ்டாலின் காங்கிரஸை கழட்டிவிட்டு, மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவிப்பார் என கருத்து விமர்சித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாய்டுவை திமுகவ பொருளாளர் துரைமுருகன் அவரது மகனுடன் சென்று பார்த்து விட்டு வந்துள்ளார். அந்த சந்திப்பு … Read more

கே.சி.ஆரை சந்தித்து தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டுள்ளார் ஸ்டாலின்! முதல்வர் விமர்சனம்!

நேற்று தெலுங்கானா முதல்வரும், தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை வீட்டில் சென்று பார்த்துள்ளார். இது பரபரப்பான அரசியல் கட்டத்தில் பேசு பொருளாகியுள்ளது. பலர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராகுலை தவிர்த்து, புதிய அணிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளார் என தகவல்களை பரப்ப, இதற்க்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஸ்டாலின், ‘ இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதே’ என கூறினார். இருப்பினும் இவரது சந்திப்பு குறித்து தமிழக … Read more

இந்த கருத்துக்கு நான் எதுவும் கூற விரும்பவில்லை – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளரை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ‘ இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துவான நாதுராம் கோட்ஸே தான்’ என கூறினார். இதற்க்கு பல பாஜக தலைவர்கள் தமிழிசை, எச் ராஜா என பலரும் தங்கள் கணடனங்களை தெரிவித்து வருகின்றனர். அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்திடம், கமல்ஹாசன் கூறியதற்கு கருத்து … Read more

காங்கிரஸ் தலைவர் உருவ பொம்மை எரிப்பு! சேலத்தில் பரபரப்பு!

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை உருவாகி உள்ளது. அடுத்தடுத்து இடைதேர்தல் மறு வாக்குபதிவு என பரபரப்பாக இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசியல் களம்.  இதில் ஜி.கே.வாசன் அவர்களின் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ளது. இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்மையில் ஒரு பேட்டியில் தமாக பாஜகவுடன் இணைய போவதாக ஒரு நாளிதழில் வந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதனை கண்டித்து சேலம் ஓமலூரை சேர்ந்த தமாகவினர் தமிழக … Read more

உச்சநீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடு செல்கிறார் கார்த்திக் சிதம்பரம்!

ஐஎன்எக்ஸ் நிறுவனம் கட்டடம் கட்டுவதற்காக நிதியுதவி வெளிநாட்டில் இருந்து முறைகேடாக பெறப்பட்டதாக அதற்கு துணையாக முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பா.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் மீது, சிபிஐ மற்றும் அமலாக்க துறையினர் அவர் மீது குற்றம் சாட்டி, அவரை வெளிநாடுகள் செல்ல விடாமல் வைத்திருந்தனர். தற்போது அந்த தடையை நீக்கவும், மே மற்றும் ஜூன் மாதங்களில் ஜெர்மனி, அமெரிக்க மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்ல உச்சநீதி மன்றத்தில் அனுமதி கேட்டிருந்தார். அதற்க்கு, … Read more

தமிழக இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை! – வைகோ கடும் விமர்சனம்!

மத்தியஅரசு பணிகள் குறிப்பாக ரயில்வே பணிகளில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்ட காலி இடங்களில் கூட வடநாட்டு மாணவர்களே அதிகம் உள்ளனர். தமிழகத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருப்பதால் இங்கு அதிகமான வேலை இல்லா திண்டாட்டம் தொடர்கிறது. இதனை குறிப்பிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,’தமிழகம் என்ன வேட்டை காடா, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு வேலை தருகிறார்கள். தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. மேலும், தமிழக இளைஞர்களுக்கு வேலை பெற்றுத்தர எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என காட்டமாக … Read more

அமெரிக்க நண்பர் வீட்டில் கிறுஸ்துமஸை கொண்டாடிய கேப்டன்! வெளியானது புகைப்படங்கள்!!

தமிழ் சினிமா நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில வருடங்களாக தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் பொது வெளியில் தெரியாமல் இருந்தார். அவருக்கு உடல் நிலை மோசமானதாகவும் அதனால் குணப்படுத்த வெளிநாட்டிற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது.  இந்நிலையில் தற்போது விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருப்பாதாகவும், அங்கு கிறுஸ்துமஸ் கொண்டாடியதாகவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. DINASUVADU

இந்தியன் 2விற்கு பிறகு, தேவர்மகன் 2!! உலகநாயகனின் அதிரடி திட்டம்!!!

உலகநாயகன் கமல்ஹாசன் கதை, திரைக்ஙதையிலும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகனின்  நடிப்பகலும் 1992ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி.பெற்ற திரைப்படம் தேவர் மகன். இப்படம் 5 தேசிய விருதுகளை அள்ளியது. மேலும் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்க உலகநாயகன் திட்டமிட்டுருப்பதாக கோலிவுட்டில் செய்திகள் உலா வருகின்றன.  ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் கமலஹாசன் அடுத்தாக நடிக்க உள்ளார். இதனை முடித்து முழு நேர அரசியலில் இரங்க … Read more

மருத்துவ மாணவி கனிமொழிக்கு உதவும் மக்கள் நீதி மைய்யம் தலைவர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த கனிமொழி என்ற மருத்துவ கல்லூரி மாணவி தற்போது கூலி வேலை செய்து வருகிறார். காரணம் இவர் குடும்பம்  மிவும் ஏழை. இவரது குடும்பத்தினர் கூலி வேலை செய்து இவரை படிக்க வைத்தனர். இந்நிலையில் இறுதியாண்டு படிக்க இருந்த இவர் குடும்ப கஷ்டத்தால் பணம் செலுத்த இயலவில்லை இதனால் தன் படிப்பை விட்டு விட்டு கூலி வேலைக்கு சென்றார். இதனை ஓர் தனியார் பத்திரிக்கை தனது செய்தியில் இதனை குறிபிட்டிருந்தது. இதனை கண்ட … Read more