உள்துறை அமைச்சர்அமித்ஷா,தமிழக ஆளுநர் குணமடைய பிரார்த்திக்கிறேன் – துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

ஆளுநர், அமித்ஷா குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அமித்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அதேபோல் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது இல்லத்தில் தொடர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில் … Read more

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகையில் 87பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி முதல்  தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனிமைப்படுத்திக்கொண்டார் .இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் பரபரப்பு ..!ஹெச்.ராஜா- ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திப்பு ..!அரைமணி நேரம் நடைபெற்ற சந்திப்பு..!

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சென்னை ராஜ்பவனில் உள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். புதுகோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்திக்கு சென்ற ஹெச்.ராஜா அங்கே நின்ற காவல்துறையினரையும் , நீதிமன்றத்தையும் கடுமையாக திட்டனார்.அவர் நீதிமன்றத்தை மிக கொச்சையாகவும், தமிழக காவல்துறை முழுவதுமாக ஊழல் நிறைந்து விட்டதாகவும் மற்றும் காவல்துறை குறித்து கொச்சையான கருத்துகளையும் அவர் கூறினார்.அப்படி அவர் பேசும்போது மதவாதத்தை தூண்டும் சில வார்த்தைகளையும் பேசினார். இதனால்  திருமயம் போலீசார் உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது … Read more