வைரமுத்து சர்ச்சை குறித்து நடிகர் விவேக் கருத்து…!!

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், “அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும்” என நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆண்டாள் குறித்த கருத்தரங்ககில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாளை அவமதித்து பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதையடுத்து, இந்து மதத்தை அவர் அவமதித்துவிட்டதாக வைரமுத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து மத ஆன்மீக உணர்வுகளையும் நாம் … Read more

பாலாவின் 'நாச்சியார்' படத்தின் ரிலீஸ் தேதி

  பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதியினை தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி, வரும் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு 9ம் தேதி வெளியாகவுள்ளதாம். பி-ஸ்டூடியோஸ் மூலம் பாலாவே தயாரித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் விரையில் வெளியாகும் என்றும் செய்திகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மணிரத்னம்…!!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு அடுத்து மணிரத்னம் தனது அடுத்த படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிக்கும் பல பிரபலங்களுள் விஜய் சேதுபதிக்கு மட்டும் அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான, சிறிய கதபாத்திரத்திற்கு தான் மணிரத்னம் கதை எழுதினாராம். ஆனால் தற்போது விஜய் சேதுபதியின் கதபாத்திரத்தின் முக்கியத்துவத்தை இயக்குநர் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது.மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் … Read more

'பிக் பாஸ்' ஜூலி நடித்து வெளியாகும் முதல் படம் 'மன்னர் வகையறா' தேதி அறிவிப்பு…!!

    பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. இந்தப் படத்தில் ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் படத்தில் சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், நாசர், ஜெயப்பிரகாஷ், ரோபோ சங்கர், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, நீலிமா ராணி, ‘பிக் பாஸ்’ ஜூலி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு, ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை அரசு பிலிம்ஸ் சார்பில் விமலே தயாரித்துள்ளார். … Read more

ரஜினி, கமல் குறித்து கவிஞர் வைரமுத்து, அப்படி என்னதான் சொன்னார் அவர்…??

  திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரிடம் நிரூபர்கள் ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு, கமலின் ட்விட்டர் பதிவுகள் குறித்து கேள்விகளை கேட்டுள்ளனர். அதற்கு அவர் கூறுகையில், “இருவரும் எனது நண்பர்கள், மேலும் இருவரும் எனது இரண்டு கண்கள் போன்றவர்கள். அவர்களை பற்றி கருத்து கூற அவகாசமான காலம் இல்லை. இன்னும் காலம் வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி முனை-விக்ரம் பிரபுவுடன் இணையும் ஹன்சிகா..!!

    நடிகை ஹன்சிகா முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்தாலும், சமீப காலமாக அவர்களுக்கு நல்ல படங்கள் அமையவில்லை. இந்நிலையில் இவர் பிரபுதேவாவுடன் நடித்த ‘குலேபகாவலி’ படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஹன்சிகா தற்போது சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதனை அடுத்து இவர் விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தினேஷ் செல்வராஜ் இயக்கும் இந்த படத்தை வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு … Read more

அஜீத்திற்காக நெகட்டிவ் ரோல் கதையினை உருவாக்கும் பிரபல இயக்குனர்

    நடிகர் அஜித் தனது சினிமா வாழ்க்கையில் ‘மங்காத்தா’, ‘பில்லா’ போன்ற படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பெரும் வெற்றியினை பெற்றவர். இந்த நிலையில் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தை இயக்கிய மோகன்ராஜா, அஜீத்தின் 59வது படத்தை இயக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டது. இதனை மோகன்ராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் “அஜீத்தை இயக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அவருக்காக ஒரு நெகட்டிவ் ஹீரோ கதையை தயார் செய்ய காத்திருக்கிறேன்” என்று … Read more

ஓவியா குறித்து சிவகார்த்திகேயன் பேசியது என்ன…??

    தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவர் அண்மையில் ஓர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் நடிகை ஓவியா குறித்து பேசினார். அவர் கூறிய விஷயம் என்னவென்றால், “என்னுடைய முதல் நாயகி ஓவியா. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவருடைய அம்மா இறந்தது தெரியவந்தது. மெரினா பட வேலைகளில் எப்போதும் அவர் எங்களுடன் இருப்பார். நான், ஓவியா, சதீஷ் மூவறும் கூட அவருக்கு உதவியாக இருப்போம்.     தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்த ஓவியா … Read more

சூர்யாவின் 37வது படத்தை இயக்கப்போவது இவரா..??- அவரே வெளியிட்ட தகவல்

  நட்சத்திர விழாவையும் தாண்டி பிஸியாக இருப்பர் நடிகர் சூர்யா. இவர் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் வரும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.அதற்கான புரொமோஷன் வேலைகளில் சூர்யா மிகவும் பிஸியாக இருக்கிறார். நேற்று மலேசியாவில் இருந்த சூர்யா தற்போது இன்று காலை முதல் ஹைதராபாத்தில் தெலுங்கு கேங் படத்திற்காக பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.அப்போது ஒரு பேட்டியில் தன்னுடைய அடுத்த படத்தை கே.வி. ஆனந்த் அவர்கள் தான் இயக்க இருப்பதாக கூறியுள்ளார். அயன், மாற்றான் படங்களுக்கு பிறகு இவர்கள் இணையும் மூன்றாவது படம் இது.இப்படத்தை … Read more

நடிகர் சங்கத்துக்கு பணம் கொடுத்த சரவணா ஸ்டோர் உரிமையாளர்

  நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் ஒரு கட்டடம் கட்டப்பட இருக்கிறது. அதற்காக பணம் சேகரிக்கும் முயற்சியில் நடிகர் சங்கம் குழு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தற்போது நட்சத்திர கலைவிழா மலேசியாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல், சூர்யா, விஷால் என பல நடிகர்கள், நடிகைகள் பங்குபெற்றுள்ளனர்.இந்த நிலையில் நடிகர் சங்கத்திற்கு சரவணா ஸ்டோர்ஸ் சார்பாக ரூ. 2.5 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.நடிகர்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் அவரும் பங்குபெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.