#Alert:இங்கே செல்லாதீர்கள்…சூறாவளி காற்று;இன்று முதல் 4 நாட்கள் இடி,மின்னலுடன் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம்  காரணமாக,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று முதல் நான்கு நாட்கள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னையை பொறுத்தவரை: சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி … Read more

#RainAlert:தமிழகத்தில் 5 நாட்கள் மழை – வானிலை மையம்!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை மழை பெய்து கோடை வெப்பத்தை சற்று தணித்துள்ளது.இந்நிலையில்,வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வரும் 28 ஆம் தேதி வரை 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,கோவை,நீலகிரி,திருப்பூர்,கரூர்,நாமக்கல்,சேலம்,ஈரோடு, காரைக்கால்,நெல்லை,தருமபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி,மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்த வரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் … Read more

#Breaking:அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் இடியுடன் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாக சில பகுதிகளில் பரவலாகவும்,சில பகுதிகளில் கன மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில்,அடுத்த 3 மணி நேரத்தில் நாகப்பட்டினம்,மயிலாடுதுறை, தஞ்சாவூர்,திருவாரூர்,புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தென்மேற்கு வங்கக் கடலில் தமிழகக் கடற்கரை,குமரி கடல்பகுதி, மன்னார் வளைகுடாவை ஒட்டிய பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் மணிக்கு … Read more

#Breaking:இன்று இந்த 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று திருநெல்வேலி,தென்காசி,தேனி, மதுரை,விருதுநகர்,திருச்சிராப்பள்ளி,கரூர்,திருப்பூர் நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை … Read more

10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை:தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் இருந்து வட கேரளா,தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக வங்கக்கடல் வரை நிலவும் காற்றின் திசை மாறுவதால்,தமிழகத்தில் இன்று ஈரோடு,நீலகிரி,கோவை, திண்டுக்கல், தேனி திருப்பூர்,சேலம்,தருமபுரி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,ராணிப்பேட்டை,வேலூர் … Read more

மத்திய பிரதேசத்தில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு…!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 4 பகுதிகளில் இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் உள்ள நான்கு வெவ்வேறு பகுதிகளில் இடி மின்னல் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. இந்த இடி மின்னல் காரணமாக ஐந்து பேர் பலியாகியுள்ளதுடன், 18 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. … Read more

விவசாய நிலத்தில் விழுந்த இடி..! பாய்ந்தோடிய நீரால் பள்ளிக்கு விடுமுறை ..!

நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.ஆனால் சேந்தமங்கலம் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்தது.இந்நிலையில் சேந்தமங்கலம் அருகே உள்ள ஜங்களாபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடியுடன் கூடிய மழை பெய்த போது சரவணன் என்பவரின் நிலத்தில் இடி விழுந்ததாக தெரிகிறது. இதனால் அந்த நிலத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் வயல் முழுவதும் தண்ணீர் நிரம்பி வீதிகளிலும் ,சாலைகளிலும் தண்ணீர் சென்றது. மேலும் அருகில் இருந்த தொடக்கப்பள்ளிக்கும் தண்ணீர் சென்றதால் நேற்று … Read more