பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை உடனடியாக அனுமதிக்க வேண்டும் – ப.சிதம்பரம் ட்வீட்!

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட். உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்தை அடுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. விரைவில் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசி 3 மாதங்களில் செயல் திறன் இழக்கும் என்ற அதிர்ச்சி தகவல் … Read more

குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்..!

குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். கொரோனாவின் இரண்டாம் அலை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பரவும் வீதம் சற்று குறைந்துள்ளது இருந்தபோதிலும் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.  மேலும் இந்த மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் தடுப்பூசிகளை தேவையான அளவு கையிருப்பு வைக்கவும் கூறி வருகின்றனர். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா குழந்தைகளுக்கு … Read more

மூன்றாம் அலையின் ஆரம்பத்தில் உள்ளோம்-உலக சுகாதார நிறுவனம்..!

நாம் கொரோனா மூன்றாம் அலையின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளதாவது, டெல்டா வகை கொரோனா பரவி வருகிறது. தற்போது துரதிருஷ்டவசமாக நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த கொரோனா வைரஸ் மேலும் மாற்றமடைந்து உருவாகி வருகிறது. டெல்டா வகைகளில் உருமாற்றம் அடைந்து பல வகை கொரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த டெல்டா வகை … Read more