ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இந்திய இராணுவம் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள உரி அருகே ராம்பூரில் மூன்று தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் சுட்டுக்கொன்றுள்ளனர். தீவிரவாதிகள் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியப் பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இந்த நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏகே-47, 8 கைத்துப்பாக்கிகள் மற்றும் 70 கையெறி குண்டுகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு … Read more

ஜம்முவில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரில் உரி அருகே எல்லை பகுதியில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீரில் உரி அருகே எல்லை பகுதியில் 3 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து ஊடுருவமுயன்ற 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து 5 ஏ.கே -47 ரக துப்பாக்கிகள், 70 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கி சண்டை…!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றுள்ளது.  ஜம்மு காஷ்மீரில் உள்ள ராஜோரி மாவட்டம் தனமண்டி என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் தனமண்டி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனை அடுத்து பாதுகாப்பு படையினரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு … Read more

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர் : 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அவந்திபோராவின் நாக்பேரான் ட்ராலின் வனப்பகுதியில் இன்று என்கவுண்டர் நடந்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 3 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஒருவர், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அடையாளம் தெரியாத … Read more

புர்கினா பாசோ தாக்குதல் : பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினர் உட்பட 80 பேர் உயிரிழப்பு!

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 80 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திய தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை அழைத்து சென்ற … Read more

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 தீவிரவாதிகள் கைது..!

ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஜம்முவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சார்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த 4 பேரும் திட்டமிட்டிருந்தது தெரியவந்ததாகவும், ஆளில்லா விமானம் மூலம் அமிர்தசரஸ் நகரம் ஆகிய ஆயுதங்கள் போடப்படும் என்றும் பானிப்பட் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை பற்றிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக கைதானவர்களில் ஒருவர் தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், … Read more

அதிர்ச்சி….!காஷ்மீரில் பாஜக தலைவர் மனைவியுடன் சுட்டுக்கொலை..!

ஜம்மு & காஸ்மீர் அனந்த்நாக் பகுதியில் பாஜக தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று நடந்த தீவிரவாத தாக்குதலில் பாரதிய ஜனதா தலைவர் மற்றும் அவரது மனைவி கொல்லப்பட்டனர். குல்காமில் பாஜகவின் கிசான் மோர்ச்சா தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி ஜவ்ஹிரா பானு ஆகியோரை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து தம்பதியினர் மருத்துவமனைக்கு … Read more

காஷ்மீரில் பாஜக தலைவர், அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை..!

ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பாஜக தலைவர் அவரது மனைவியும் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் பாஜகவின் கிசான் மோர்ச்சாவின் குல்கம் மாவட்டத் தலைவர் குலாம் ரசூல் தார் மற்றும் அவரது மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், பாஜகவின் கிசான் … Read more

இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் – ராணுவ அதிகாரி!

இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள் என  ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நட்புறவில் இருந்து விலகி போர் பதற்றமான சூழல் உருவாகி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிரமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் நிலையில் காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய … Read more

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை…!

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியின் நாக்பெரான்-தார்சார் வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்த வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை கண்டறிந்து, அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு பயங்கரவாதிகள் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில், … Read more