ரூ.200 கோடி டார்கெட் வைத்து அதனை நிறைவேற்றும் பொறுப்பில் டாஸ்மாக்

ஒவ்வொரு பண்டிகையின் போதும் டாஸ்மாக் ஒரு டார்கெட் வைத்து அதனை முறியடித்தும் வருகிறது. அந்த வகையில் தற்போது ஆங்கில புத்தாண்டுக்கு ரூ.200 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளது. இந்த டார்கெட்டை நிறைவு செய்ய அதிகமாக பீர்களை கொள்முதல் செய்து கடைகளுக்கு அனுப்பி வருகிறது. அதேபோல் அதிக விலைக்கு மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் தெரிவித்துள்ளது. source : dinasuvadu.com