கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை செயலாளர்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். நேற்று நாடு முழுவதும் கொரோனாதடுப்பூசி போடும் பணிதொடங்கி வைக்கப்பட்டது.தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் 166 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.இந்நிலையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் திருச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

5.56 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகை – சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்

சென்னையில் இருந்து தமிழகத்தின் 10 மையங்களுக்கு கொரோனா தடுப்பூசிகள்  அனுப்பி வைக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  ஆக்ஸ்போர்டு – சீரம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளை அவசரகாலத்துக்கு பயன்படுத்த, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்தது.இதையடுத்து நாடு முழுவதும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் … Read more