சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் ஜுன் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படாததால் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால்  பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருடன் தொழிற்சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை  நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் … Read more