ஏப்.1 முதல் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் தொடங்கலாம்- சிபிஎஸ்இ அறிவிப்பு

வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவக்கிக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் பள்ளிகளை தொடங்கலாம் என்றும் மாநில அரசின் அனுமதியோடு, நடப்பு கல்வி ஆண்டில் முன்கூட்டியே பள்ளிகளை திறக்க சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது. மேலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிபிஎஸ்இ 9 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.