ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் – மத்திய அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்களை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளிக்க வேண்டும் என மத்திய அரசு கடிதம். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் பட்டியலை அளிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து வரும் தகவல்களை திரட்டி, நாடாளுமன்ற அவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்று மத்திய … Read more

#BREAKING: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – மத்திய சுகாதார அமைச்சகம்

மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக தரப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை நிர்ணயம் செய்திருந்தது. இதையடுத்து, ஏன் இலவசமாக தடுப்பூசி வழங்கக்கூடாது என பலவேறு தரப்பில் இருந்து … Read more

கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுதோல்வி – முக ஸ்டாலின்

கொரோனா பேரிடரிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுதோல்வி அடைந்திருப்பது ஏன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜனை தட்டுபாடு இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கொரோனா ஏற்பட்டவுடன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை … Read more

தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெறுக – மத்திய உள்துறை செயலாளர்

தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெறுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாநில தலைமை செயலாளர்கள் உடன் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, தேவையான அளவு கொரோனா தடுப்பூசிகளை முன்கூட்டியே கேட்டுப்பெறுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களில் ஏற்பட்டுள்ள படுக்கை வசதி குறைவு, ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் … Read more

தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழப்பு..ரூ.5,000 கோடி இழப்பு – சந்திரசேகர் ராவ்

தெலுங்கானா வெள்ளத்தில் 50 பேர் உயிரிழந்தனர், மாநிலத்திற்கு 5,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார். தெலுங்கானாவில் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. இதில், 50 பேர் இறந்ததாக மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதியிலிருந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவ் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வகையில், நேற்று … Read more

“மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் மாநிலங்கள் ஊரடங்கு அறிவிக்க கூடாது!”- மத்திய அரசு

மத்திய அரசின் உத்தரவு இல்லாமல் எந்த மாநிலங்கழும் ஊரடங்கை அறிவிக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் 25- ம் தேதி முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு, மே 31- ம் தேதி வரை கடுமையாக இருந்தது. அதன்பின், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு, ஜூன் 1 முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் … Read more

கட்டணத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், பலர் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 1 ஆம் தேதி முதல் ரெயில்வே அமைச்சகம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சிறப்பு … Read more

மாநில அரசுகள் 60% வரை கூடுதல் கடன் பெறலாம் – ரிசர்வ் வங்கி ஆளுநர்.!

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து சில சலுகைகளை அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தாக்கம் தினந்தோறும் அதிகரித்து வருவதால் கடந்த 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் நிறைவடைய இருந்த ஊரடங்கு, மேலும் 19 நீட்டித்து, மே 3 … Read more

பாலியல் புகார் தமிழக அரசின் மீது நீதிமன்றம் அதிருப்தி…!!

லஞ்ச ஒழிப்புத்துறை I.G மீது பெண் S.P கொடுத்த  புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து  நீதிமன்றம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது I.G மீதான பாலியல் புகாரில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே போல அந்த பெண் S.P தொடுத்த வழக்கில் சம்பந்தப்பட்ட I.G_யை இடைநீக்கம் செய்யவேண்டுமென்றும் அதே போல I.G இடைநீக்கத்தை ரத்து செய்யவேண்டு மென்றும் நீதிமன்றத்தில் வழக்கு … Read more