கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு…!

தாம்பரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சென்னை தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் எனும் பகுதியில் உள்ள ஜெயக்குமார் என்பவர் வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக பணியாளர்கள் சென்றுள்ளனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் ஏழுமலை, ராஜேஷ் ஆகியோர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி மணிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜார்கண்டில் கழிவு நீர் தொட்டியின் விச வாயு தாக்கி 6 பேர் பலி.!

ஜார்க்கண்டில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழப்பு. ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் கழிவு நீர் தொட்டிக்குள் விஷ வாயு சுவாசித்ததில் 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அம்மாநில போலீஸார் தெரிவித்தினர். இரண்டு தொழிலாளர்கள் காலையில் ஒரு தனியார் வீட்டின் கழிவு நீர் தொட்டியில்  சுத்தம் செய்ய வந்தனர். அவர்கள் வெளியே வரத் தவறியபோது வீட்டு உரிமையாளரின் இரண்டு மகன்களும் தொட்டியில் நுழைந்ததாக போலீஸ் பியூஷ் பாண்டே கூறினார். அவர்கள் நான்கு … Read more